பாடினோர் பகுதி |
இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் |
'நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும், |
|
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ, |
|
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல |
|
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய |
|
5 |
மென் முலை முற்றம் கடவாதோர்' என, |
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து |
|
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி |
|
ஆள்வினை மாரியின் அவியா, நாளும் |
|
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை |
விளரி நரம்பின் நயவரு சீறியாழ் |
|
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு |
|
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் |
|
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை |
|
15 |
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி, |
கையறு நெஞ்சினள், அடைதரும் |
|
மை ஈர் ஓதி மாஅயோளே? |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் | |
உரை |
மேல் |