பாடினோர் பகுதி |
இறங்குகுடிக் குன்ற நாடன் |
'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர், |
|
வேறு பல் மொழிய தேஎம் முன்னி, |
|
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு |
|
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி, |
|
5 |
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே, |
வலன் ஆக!' என்றலும் நன்றுமன் தில்ல |
|
கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த |
|
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி, |
|
கொடுமரம் பிடித்த கோடா வன்கண், |
|
10 |
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர், |
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை, |
|
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல் |
|
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ, |
|
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு, |
|
15 |
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண், |
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு |
|
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே. |
|
செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன் | |
உரை |
மேல் |