ஈழத்துப் பூதன் தேவனார், மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் |
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை |
|
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் |
|
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் |
|
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, |
|
5 |
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய |
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் |
|
நடுங்கு துயர் களைந்த நன்னராளன் |
|
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து |
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக் |
|
10 |
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் |
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து, |
|
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் |
|
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி, |
|
கொடு விரல் உளியம் கெண்டும் |
|
15 |
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு |
|
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும், |
|
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி, |
|
நல் இசை வலித்த நாணுடை மனத்தர் |
|
5 |
கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர், |
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக் |
|
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ, |
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை |
|
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக |
|
10 |
வருவர் வாழி, தோழி! பொருவர் |
செல் சமம் கடந்த செல்லா நல் இசை, |
|
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன் |
|
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் |
|
ஆடு வண்டு அரற்றும் முச்சித் |
|
15 |
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே. |
தலைமகள் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
'சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய், |
|
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட, |
|
பகலும் கங்குலும் மயங்கி, பையென, |
|
பெயல் உறு மலரின் கண் பனி வார, |
|
5 |
ஈங்கு இவள் உழக்கும்' என்னாது, வினை நயந்து, |
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை |
|
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை |
|
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து, |
|
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை, |
|
10 |
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும் |
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில், |
|
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து |
|
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது, |
|
இரும் புறாப் பெடையொடு பயிரும் |
|
15 |
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே? |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
மேல் |