பாடினோர் பகுதி |
ஒரோடோகத்துக் கந்தரத்தனார் |
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல், |
|
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி; |
|
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை |
|
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ, |
|
5 |
காடே கம்மென்றன்றே; அவல, |
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர், |
|
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை |
|
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ, |
|
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே; |
|
10 |
அனையகொல் வாழி, தோழி! மனைய |
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும் |
|
மௌவல், மாச் சினை காட்டி, |
|
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே! |
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
உரை |
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய், |
|
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்; |
|
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்; |
|
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின் |
|
5 |
எவனோ? வாழி, தோழி! பொரிகால் |
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற |
|
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ, |
|
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க, |
|
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும் |
|
10 |
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார், |
கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர் |
|
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ |
|
புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ, |
|
நம் உணர்ந்து ஆறிய கொள்கை |
|
15 |
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே? |
போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
உரை |
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ |
|
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ, |
|
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி, |
|
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர் |
|
5 |
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி, |
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் |
|
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர் |
|
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி, |
|
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு |
|
10 |
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை, |
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி, |
|
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும், |
|
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை |
|
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி, |
|
15 |
அறல் என விரிந்த உறல் இன் சாயல் |
ஒலி இருங் கூந்தல் தேறும்' என, |
|
வலிய கூறவும் வல்லையோ, மற்றே? |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
உரை |
மேல் |