பாடினோர் பகுதி |
உலோச்சனார் |
பெருநீர் அழுவத்து எந்தை தந்த |
|
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி, |
|
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ, |
|
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி, |
|
5 |
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் |
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, |
|
கொண்டல் இடு மணல் குரவை முனையின் |
|
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி, |
|
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப் |
|
10 |
பல் பூங் கானல் அல்கினம் வருதல் |
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர், |
|
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை |
|
கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை, |
|
எல்லையும் இரவும் என்னாது, கல்லென |
|
15 |
வலவன் ஆய்ந்த வண் பரி |
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே. |
|
பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது. - உலோச்சனார் | |
உரை |
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, |
|
புரையப் பூண்ட கோதை மார்பினை, |
|
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, |
|
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. |
|
5 |
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த |
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த |
|
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் |
|
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, |
|
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த |
|
10 |
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் |
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், |
|
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் |
|
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை |
|
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன |
|
15 |
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் |
வைகுறு விடியல் போகிய எருமை |
|
நெய்தல் அம் புது மலர் மாந்தும் |
|
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே! |
|
தோழி வரைவு கடாயது. - உலோச்சனார் | |
உரை |
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு |
|
உப்பின் குப்பை ஏறி, எல் பட, |
|
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே |
|
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே; |
|
5 |
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்; |
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப் |
|
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த |
|
வம்ப நாரை இரிய, ஒரு நாள், |
|
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும், |
|
10 |
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை |
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி |
|
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப, |
|
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில |
|
நிரைமணிப் புரவி விரைநடை தவிர, |
|
15 |
இழுமென் கானல் விழு மணல் அசைஇ, |
ஆய்ந்த பரியன் வந்து, இவண் |
|
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே! |
|
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார் | |
உரை |
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், |
|
புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை, |
|
ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து, |
|
இன்னா உறையுட்டுஆயினும், இன்பம் |
|
5 |
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள், |
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி |
|
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப! |
|
பொம்மற் படு திரை கம்மென உடைதரும் |
|
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி, |
|
10 |
எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற, |
நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று, |
|
சேந்தனிர் செல்குவிர்ஆயின், யாமும் |
|
எம் வரை அளவையின் பெட்குவம்; |
|
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே. |
|
தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார் | |
உரை |
குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர் |
|
எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன் |
|
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட, |
|
விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த் |
|
5 |
திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து, |
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், |
|
பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி, |
|
தான் இவண் வந்த காலை, நம் ஊர்க் |
|
கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி, |
|
10 |
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன் |
சாயல் மார்பின் பாயல் மாற்றி, |
|
'கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச் |
|
செலவு அரிது என்னும்' என்பது |
|
பல கேட்டனமால் தோழி! நாமே. |
|
தோழி தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - உலோச்சனார் | |
உரை |
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் |
|
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார், |
|
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க |
|
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை, |
|
5 |
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர், |
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல் |
|
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி, |
|
'செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை' எனச் |
|
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து, |
|
10 |
தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது, |
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப் |
|
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால், |
|
சேணின் வருநர் போலப் பேணா, |
|
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின், |
|
15 |
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ, |
'துறையும் மான்றன்று பொழுதே; சுறவும் |
|
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே; |
|
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என, |
|
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற, |
|
20 |
இளையரும் புரவியும் இன்புற, நீயும் |
இல் உறை நல் விருந்து அயர்தல் |
|
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே. |
|
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை | |
உரை |
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும், |
|
வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும், |
|
இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும், |
|
தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர் |
|
5 |
அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு |
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்! |
|
செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று, |
|
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் |
|
எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும், |
|
10 |
காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ? |
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே; |
|
குப்பை வெண் மணற் குவவுமிசையானும், |
|
எக்கர்த் தாழை மடல்வயினானும், |
|
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு, |
|
15 |
சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த |
கடுஞ் செலல் கொடுந் திமில் போல, |
|
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே! |
|
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார் | |
உரை |
நகை நன்று அம்ம தானே 'அவனொடு, |
|
மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து, |
|
கானல் அல்கிய நம் களவு அகல, |
|
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை, |
|
5 |
நூல் அமை பிறப்பின், நீல உத்தி, |
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி, |
|
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை |
|
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக் |
|
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு |
|
10 |
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ, |
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி, |
|
மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப் |
|
புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க் |
|
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி, |
|
15 |
பால் கண்டன்ன ஊதை வெண் மணல், |
கால் கண்டன்ன வழி படப் போகி, |
|
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண், |
|
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு |
|
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை, |
|
20 |
பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு, |
நேமி தந்த நெடுநீர் நெய்தல் |
|
விளையா இளங் கள் நாற, பலவுடன் |
|
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும் |
|
புதுவது ஆகின்று அம்ம பழ விறல், |
|
25 |
பாடு எழுந்து இரங்கு முந்நீர், |
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே! |
|
தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது. -உலோச்சனார் | |
உரை |
மேல் |