பாடினோர் பகுதி |
உவர்க் கண்ணூர்ப் புல்லங்கீரனார் |
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு |
|
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, |
|
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ, |
|
படப்பை நண்ணி, பழனத்து அல்கும் |
|
5 |
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், |
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள் |
|
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை |
|
யார்கொல் அளியள்தானே எம் போல் |
|
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, |
|
10 |
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் |
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து, |
|
ஆயமும் அயலும் மருள, |
|
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே? |
|
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் | |
உரை |
மேல் |