பாடினோர் பகுதி |
ஊட்டியார் |
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத் |
|
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய, |
|
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம் |
|
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை |
|
5 |
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை |
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என, |
|
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே; |
|
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள், |
|
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை |
|
10 |
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் |
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச் |
|
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின் |
|
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக, |
|
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து |
|
15 |
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் |
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப, |
|
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம் |
|
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன் |
|
வெண் கோட்டு யானை விளி படத் துழவும் |
|
20 |
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் |
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே. |
|
தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - ஊட்டியார் | |
உரை |
அம்ம வாழி, தோழி நம் மலை |
|
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின், |
|
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத |
|
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல் |
|
5 |
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி, |
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ |
|
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து, |
|
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி |
|
இன் இசை ஓரா இருந்தனமாக, |
|
10 |
'மை ஈர் ஓதி மட நல்லீரே! |
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து, |
|
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் |
|
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என, |
|
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட, |
|
15 |
சொல்லிக் கழிந்த வல் விற் காளை |
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து, |
|
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள், |
|
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என, |
|
அன்னை தந்த முது வாய் வேலன், |
|
20 |
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்; |
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின், |
|
வினவின் எவனோ மற்றே 'கனல் சின |
|
மையல் வேழ மெய் உளம்போக, |
|
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு |
|
25 |
காட்டு மான் அடி வழி ஒற்றி, |
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே? |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார் | |
உரை |
மேல் |