எயினந்தை மகனார் இளங்கீரனார் |
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன |
|
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் |
|
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, |
|
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய, |
|
5 |
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை |
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி, |
|
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
10 |
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் |
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம், |
|
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி, |
|
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய் |
|
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா |
|
15 |
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், |
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை |
|
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் |
|
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? |
|
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார். | |
உரை |
அன்பும், மடனும், சாயலும், இயல்பும், |
|
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும், |
|
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி, |
|
இன்றே இவணம் ஆகி, நாளை, |
|
5 |
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற |
அகலா அம் துளை, கோடை முகத்தலின், |
|
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல் |
|
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், |
|
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து, |
|
10 |
யாத்த தூணித் தலை திறந்தவைபோல், |
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் |
|
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர, |
|
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச் |
|
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை |
|
15 |
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், |
செறி தொடி முன்கை, நம் காதலி |
|
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே? |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
அளிதோதானே; எவன் ஆவதுகொல்? |
|
மன்றும் தோன்றாது; மரனும் மாயும் |
|
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர், |
|
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர், |
|
5 |
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய |
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும் |
|
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி, |
|
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், |
|
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் |
|
10 |
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய, |
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே, |
|
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என, |
|
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு |
|
நெருநலும் தீம் பல மொழிந்த |
|
15 |
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே! |
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார் | |
உரை |
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் |
|
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் |
|
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும் |
|
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின், |
|
5 |
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும், |
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது, |
|
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது |
|
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி |
|
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த |
|
10 |
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி, |
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப, |
|
மை அற விரிந்த படை அமை சேக்கை |
|
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ, |
|
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் |
|
15 |
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, |
'நல்ல கூறு' என நடுங்கி, |
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே? |
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார் | |
உரை |
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த |
|
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய |
|
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும், |
|
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே |
|
5 |
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை |
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு, |
|
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன் |
|
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய், |
|
கவலை கரக்கும் காடு அகல் அத்தம், |
|
10 |
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென, |
வைகு நிலை மதியம் போல, பையென, |
|
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த |
|
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா, |
|
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண் |
|
15 |
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப, |
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி, |
|
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு, |
|
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல் மாண்டு |
|
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா, |
|
20 |
பருவரல் எவ்வமொடு அழிந்த |
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே. |
|
இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண், |
|
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன, |
|
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண், |
|
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை |
|
5 |
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும், |
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து |
|
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என |
|
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய், |
|
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே! |
|
10 |
கரியாப் பூவின் பெரியோர் ஆர, |
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை |
|
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு, |
|
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று, |
|
சில் மொழி, அரிவை தோளே பல் மலை |
|
15 |
வெவ் அறை மருங்கின் வியன் சுரம், |
எவ்வம் கூர, இறந்தனம், யாமே. |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை, |
|
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர் |
|
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி, |
|
குறு நெடுந் துணைய மறி புடை ஆட, |
|
5 |
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை |
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது, |
|
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும், |
|
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம், |
|
10 |
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து, |
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர் |
|
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ |
|
வீ தேர் பறவை விழையும் |
|
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே? |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார் | |
உரை |
தண் கயம் பயந்த வண் காற் குவளை |
|
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன, |
|
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண் |
|
பனி வார் எவ்வம் தீர, இனி வரின், |
|
5 |
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர் |
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை |
|
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின், |
|
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை, |
|
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி, |
|
10 |
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு, |
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல் |
|
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும், |
|
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து, |
|
ஆடு கழை இரு வெதிர் நரலும் |
|
15 |
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே! |
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி, |
|
இமையக் கானம் நாறும் கூந்தல், |
|
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம் |
|
பருகுவன்ன காதல் உள்ளமொடு, |
|
5 |
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார் |
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த |
|
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட, |
|
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை |
|
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி, |
|
10 |
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ, |
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் |
|
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி, |
|
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் |
|
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி, |
|
15 |
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், |
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல், |
|
வேய் கண் உடைந்த சிமைய, |
|
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
மேல் |