பாடினோர் பகுதி |
ஒளவையார் |
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் |
|
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு, |
|
இலை இல மலர்ந்த முகை இல் இலவம் |
|
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த |
|
5 |
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி, |
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் |
|
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென, |
|
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப் |
|
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர், |
|
10 |
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் |
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர, |
|
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து |
|
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும் |
|
அழுதல் மேவல ஆகி, |
|
15 |
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்'என்பது படச் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த |
|
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன |
|
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை |
|
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, |
|
5 |
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, |
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை |
|
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் |
|
நெறி படு கவலை நிரம்பா நீளிடை, |
|
வெள்ளி வீதியைப் போல நன்றும் |
|
10 |
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து, |
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் |
|
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, |
|
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே! |
|
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின், |
|
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ, |
|
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப, |
|
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம், |
|
5 |
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர் |
அறியார்கொல்லோ, தாமே? அறியினும், |
|
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின், |
|
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ? |
|
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு |
|
10 |
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு |
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை |
|
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி, |
|
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை, |
|
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி, |
|
15 |
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம் |
நில வரை எல்லாம் நிழற்றி, |
|
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே. |
|
பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-ஒளவையார் | |
உரை |
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து, |
||||
பேஎய் கண்ட கனவின், பல் மாண் |
||||
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல், |
||||
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன் |
||||
5 |
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை |
|||
மா இருங் கொல்லி உச்சித் தாஅய், |
||||
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் |
||||
புலம் கந்தாக இரவலர் செலினே, |
||||
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும் |
||||
10 |
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் |
|||
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி, |
||||
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு |
||||
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப் |
||||
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு, |
||||
15 |
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! |
|||
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன் |
||||
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர் |
||||
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து, |
||||
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர் |
||||
20 |
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே. |
|||
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
மேல் |