பாடினோர் பகுதி |
கடுந்தொடைக்காவினார் |
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ் |
|
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி, |
|
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே |
|
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக் |
|
5 |
காடு கால்யாத்த நீடு மரச் சோலை |
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை, |
|
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் |
|
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச் |
|
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென, |
|
10 |
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், |
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு |
|
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப் |
|
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் |
|
அறன் இல் வேந்தன் ஆளும் |
|
15 |
வறன் உறு குன்றம் பல விலங்கினவே. |
இடைச் சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- கடுந்தொடைக் காவினார் | |
உரை |
மேல் |