பாடினோர் பகுதி |
கருவூர்ப் பூதஞ்சாத்தனார் |
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி, |
|
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்; |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்; |
|
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப, |
|
5 |
பகலும் நம்வயின் அகலானாகிப் |
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன், |
|
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி, |
|
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது, |
|
மல்லல் மூதூர் மறையினை சென்று, |
|
10 |
சொல்லின் எவனோ பாண! 'எல்லி |
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் |
|
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என, |
|
கண் நிறை நீர் கொடு கரக்கும், |
|
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே. |
|
தோழி பாணனுக்குச் சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார் | |
உரை |
மேல் |