பாடினோர் பகுதி |
கழார்க் கீரன் எயிற்றியார் |
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய, |
|
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள், |
|
எமியம் ஆக, துனி உளம் கூர, |
|
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ, |
|
5 |
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி |
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது |
|
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை |
|
முளரி கரியும் முன்பனிப் பானாள், |
|
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை! |
|
10 |
எனக்கே வந்தனை போறி! புனற் கால் |
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ, |
|
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது |
|
இனையை ஆகிச் செல்மதி; |
|
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே! |
|
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, |
|
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, |
|
துவலை தூவல் கழிய, அகல் வயல் |
|
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் |
|
5 |
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, |
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை |
|
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய |
|
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, |
|
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, |
|
10 |
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, |
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென |
|
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, |
|
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, |
|
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச் |
|
15 |
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; |
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த |
|
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, |
|
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, |
|
எயிறு தீப் பிறப்பத் திருகி, |
|
20 |
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து |
|
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், |
|
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? |
|
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, |
|
5 |
விண்டு முன்னிய கொண்டல் மா மழை |
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, |
|
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி |
|
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ, |
|
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ |
|
10 |
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, |
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல் |
|
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ |
|
மாரி அம் குருகின் ஈரிய குரங்க, |
|
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி, |
|
15 |
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை |
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய, |
|
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு |
|
தொல் நலம் சிதையச் சாஅய், |
|
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி, |
|
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப் |
|
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய, |
|
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் |
|
5 |
நீர் வார் கண்ணின் கருவிளை மலர, |
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை |
|
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர் |
|
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர, |
|
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல் |
|
10 |
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச, |
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள், |
|
'காய் சின வேந்தன் பாசறை நீடி, |
|
நம் நோய் அறியா அறனிலாளர் |
|
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என | |
15 |
ஆனாது எறிதரும் வாடையொடு |
நோனேன் தோழி! என் தனிமையானே. |
|
பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார் | |
உரை |
மேல் |