பாடினோர் பகுதி |
காவட்டனார் |
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், |
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, |
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை |
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, |
|
5 |
காமர் பீலி ஆய் மயில் தோகை |
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் |
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல |
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி, |
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, |
|
10 |
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் |
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும், |
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும், |
|
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச் |
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு |
|
15 |
குட கடல் சேரும் படர் கூர் மாலையும், |
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, |
|
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி! |
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர் |
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு |
|
20 |
அள் இலைப் பலவின் கனி கவர் கைய |
கல்லா மந்தி கடுவனோடு உகளும் |
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து, |
|
பாடு இன் அருவி சூடி, |
|
வான் தோய் சிமையம் தோன்றலானே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார் | |
உரை |
மேல் |