காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் |
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, |
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த |
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு |
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று |
|
5 |
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், |
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், |
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு |
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட |
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு |
|
10 |
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் |
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் |
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து, |
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து |
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, |
|
15 |
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு |
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் |
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி, |
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர் |
|
மாலை இன் துணைஆகி, காலைப் |
|
20 |
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, |
மண மனை கமழும் கானம் |
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே. |
|
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
உண்ணாமையின் உயங்கிய மருங்கின் |
|
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல, |
|
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும் |
|
கான யானை கவின் அழி குன்றம் |
|
5 |
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த |
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி |
|
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு |
|
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என |
|
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் |
|
10 |
மழை மருள் பல் தோல் மா வண் சோழர் |
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை, |
|
இறவொடு வந்து கோதையொடு பெயரும் |
|
பெருங் கடல் ஓதம் போல, |
|
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே. |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனார் | |
உரை |
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம் |
|
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து |
|
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று |
|
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர், |
|
5 |
காடு தேர் மடப் பிணை அலற, கலையின் |
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை |
|
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி |
|
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன |
|
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை |
|
10 |
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி, |
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை |
|
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள் |
|
குவளை உண்கண் இவளும் நம்மொடு |
|
வரூஉம் என்றனரே, காதலர்; |
|
15 |
வாராய் தோழி! முயங்குகம், பலவே. |
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
மேல் |