காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் |
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த |
|
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின், |
|
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி, |
|
காமர் சேவல் ஏமம் சேப்ப; |
|
5 |
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது |
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து, |
|
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி, |
|
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை, |
|
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும் |
|
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின் |
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என, |
|
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக |
|
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு |
|
தானே சென்ற நலனும் |
|
15 |
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே? |
தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது.- காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் | |
உரை |
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல் |
|
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி, |
|
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு, |
|
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக் |
|
5 |
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி, |
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர் |
|
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப் |
|
பல் காய் அம் சினை அகவும் அத்தம் |
|
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு |
|
10 |
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே, |
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே, |
|
களி மலி கள்ளின் நல் தேர் அவியன் |
|
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும் |
|
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின் |
|
15 |
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள், |
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின், |
|
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே? |
|
செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் | |
உரை |
மேல் |