பாடினோர் பகுதி |
குடவாயிற் கீரத்தனார் |
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், |
|
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப |
|
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை, |
|
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர் |
|
5 |
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த |
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர் |
|
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார், |
|
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து, |
|
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும் |
|
10 |
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம் |
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து அணிந்து, |
|
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன் |
|
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல |
|
துஞ்சா முழவின் கோவற் கோமான் |
|
15 |
நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை, |
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் |
|
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு, |
|
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே! |
|
மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும் |
|
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே; |
|
முரண் செறிந்திருந்த தானை இரண்டும் |
|
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர் |
|
5 |
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, |
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய |
|
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி, |
|
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி, |
|
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு |
|
10 |
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், |
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென, |
|
கண்டது நோனானாகி, திண் தேர்க் |
|
கணையன் அகப்பட, கழுமலம் தந்த |
|
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி |
|
15 |
அழும்பில் அன்ன அறாஅ யாணர், |
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை, |
|
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை, |
|
தண் குடவாயில் அன்னோள் |
|
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே! |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க, |
|
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை |
|
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, |
|
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு |
|
5 |
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, |
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் |
|
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் |
|
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய; |
|
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை, |
|
10 |
கோதை ஆயமொடு வண்டல் தைஇ, |
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக் |
|
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற் |
|
கொற்றச் சோழர் குடந்தை வைத்த |
|
நாடு தரு நிதியினும் செறிய |
|
15 |
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே. |
தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் |
|
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, |
|
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், |
|
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய |
|
5 |
வன் புலம் துமியப் போகி, கொங்கர் |
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் |
|
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள் |
|
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் |
|
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப, |
|
10 |
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர |
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை |
|
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை, |
|
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக் |
|
கொடு வில் எயினர் கோட் சுரம் படர, |
|
15 |
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை, |
கல் பிறங்கு அத்தம் போகி, |
|
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே. |
|
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
'நுதலும் தோளும், திதலை அல்குலும், |
|
வண்ணமும், வனப்பும், வரியும், வாட |
|
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி, |
|
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது, |
|
5 |
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை, |
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப, |
|
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள, |
|
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் |
|
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் |
|
10 |
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து, |
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை, |
|
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை, |
|
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு |
|
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப, |
|
15 |
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள |
மறப் புலி உழந்த வசி படு சென்னி |
|
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி, |
|
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை |
|
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை, |
|
20 |
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே? |
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என |
|
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் |
|
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து |
|
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி, |
|
5 |
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண், |
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் |
|
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப் |
|
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி, |
|
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் |
|
10 |
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும் |
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப, |
|
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், |
|
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும் |
|
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல் |
|
15 |
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின், |
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என |
|
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் |
|
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ, |
|
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக, |
|
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை, |
|
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின் |
|
5 |
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் |
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை, |
|
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து |
|
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை |
|
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை, |
|
10 |
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க, |
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த |
|
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க, |
|
அரம்பு வந்து அலைக்கும் மாலை, |
|
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே. |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார் | |
உரை |
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும் |
|
சூழி மென் முகம் செப்புடன் எதிரின; |
|
பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண் |
|
கண் துணை ஆக நோக்கி, நெருநையும், |
|
5 |
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், |
அறியாமையின் செறியேன், யானே; |
|
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் |
|
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள், |
|
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி, |
|
10 |
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக் |
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய், |
|
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப, |
|
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென, |
|
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி, |
|
15 |
சேக்குவள் கொல்லோதானே தேக்கின் |
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை, |
|
ஊன் புழுக்கு அயரும் முன்றில், |
|
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே. |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார் | |
உரை |
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி, |
|
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண் |
|
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க் |
|
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால், |
|
5 |
பல் படைப் புரவி எய்திய தொல் இசை |
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய |
|
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து, |
|
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல் |
|
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் |
|
10 |
சில் நாள் கழிக!' என்று முன் நாள் |
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு |
|
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார், |
|
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப, |
|
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய |
|
15 |
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த |
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச் |
|
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப, |
|
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு |
|
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் |
|
20 |
கல் கண் சீக்கும் அத்தம், |
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே! |
|
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய |
|
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து, |
|
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி, |
|
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன் |
|
5 |
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின், |
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர் |
|
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ, |
|
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி, |
|
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு, |
|
10 |
நரை மூதாளர் கை பிணி விடுத்து, |
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் |
|
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன, |
|
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல் அரிவையொடு, |
|
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை |
|
15 |
நீ தற் பிழைத்தமை அறிந்து, |
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே. |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல் |
|
என் ஓரன்ன தாயரும், காண, |
|
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர் |
|
காவிரிப் படப்பை உறந்தை அன்ன |
|
5 |
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர, |
நல் மாண் விழவில் தகரம் மண்ணி, |
|
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு |
|
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன், |
|
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் |
|
10 |
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, |
வளையுடை முன்கை அளைஇ, கிளைய |
|
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை |
|
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல் |
|
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும், |
|
15 |
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, |
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச் |
|
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ, |
|
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
மேல் |