பாடினோர் பகுதி |
குமுழி ஞாழலார் நப்பசலையார் |
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ? |
|
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம். |
|
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக் |
|
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி, |
|
5 |
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த |
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை |
|
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க் |
|
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: |
|
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல |
|
10 |
வாவு உடைமையின் வள்பின் காட்டி, |
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி |
|
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி |
|
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல், |
|
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப, |
|
15 |
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது |
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் |
|
அரவச் சீறூர் காண, |
|
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே. |
|
தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார் | |
உரை |
மேல் |