பாடினோர் பகுதி |
குறுங்குடி மருதனார் |
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு |
|
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, |
|
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின், |
|
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப, |
|
5 |
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, |
கருவி வானம் கதழ் உறை சிதறி, |
|
கார் செய்தன்றே, கவின் பெறு கானம். |
|
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, |
|
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய, |
|
10 |
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த |
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, |
|
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், |
|
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன், |
|
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது, |
|
15 |
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் |
போது அவிழ் அலரின் நாறும் |
|
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. |
|
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார் | |
உரை |
மேல் |