பாடினோர் பகுதி |
குறுவழுதியார் |
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென |
|
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக் |
|
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி; |
|
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி, |
|
5 |
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, |
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல் |
|
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை, |
|
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர் |
|
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ, |
|
10 |
மாலை மணி இதழ் கூம்ப, காலைக் |
கள் நாறு காவியொடு தண்ணென மலரும் |
|
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து; |
|
'வாரார்கொல்?' எனப் பருவரும் |
|
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே! |
|
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார் | |
உரை |
மேல் |