பாடினோர் பகுதி |
குன்றியனார் |
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப, |
|
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, |
|
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி |
|
குவை இரும் புன்னைக் குடம்பை சேர, |
|
5 |
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, |
தாழை தளரத் தூக்கி, மாலை |
|
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் |
|
காமர் நெஞ்சம் கையறுபு இனைய, |
|
துயரம் செய்து நம் அருளார் ஆயினும் |
|
10 |
அறாஅலியரோ அவருடைக் கேண்மை! |
அளி இன்மையின் அவண் உறை முனைஇ, |
|
வாரற்கதில்ல தோழி! கழனி |
|
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் |
|
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை |
|
15 |
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை |
அகமடல் சேக்கும் துறைவன் |
|
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார் | |
உரை |
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப, |
|
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் |
|
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப, |
|
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து, |
|
5 |
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, |
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் |
|
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப, |
|
கோழிணர் எதிரிய மரத்த, கவினி, |
|
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில், |
|
10 |
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய், |
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த |
|
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ |
|
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர் |
|
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன |
|
15 |
அம் கலுழ் மாமை கிளைஇய, |
நுண் பல் தித்தி, மாஅயோளே? |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார் | |
உரை |
மேல் |