கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் (நெய்தற்றத்தனார்) |
அவரை ஆய் மலர் உதிர, துவரின |
|
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப, |
|
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக் |
|
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய, |
|
5 |
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு |
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி |
|
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக் |
|
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை! |
|
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப் |
|
10 |
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை |
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை |
|
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல; |
|
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது |
|
நமக்கே எவ்வம் ஆகின்று; |
|
15 |
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே! |
தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் 'ஆற்றேன்' என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் | |
உரை |
மேல் |