கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் |
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக, |
|
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே; |
|
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப! |
|
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த |
|
5 |
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் |
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின் |
|
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து, |
|
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்; |
|
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன் |
|
10 |
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, |
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண் |
|
வாள் வரி வயப் புலி கல் முழை உரற, |
|
கானவர் மடிந்த கங்குல்; |
|
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே? |
|
இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது. -கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் | |
உரை |
மேல் |