கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் |
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில், |
|
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு, |
|
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி |
|
5 |
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது, |
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் |
|
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர் |
|
நல் நிலை பொறித்த கல் நிலை அதர, |
|
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச் |
|
10 |
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை, |
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய், |
|
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம் |
|
மதி ஏர் வாள் நுதல் புலம்ப, |
|
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே? |
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது.
-கொடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார் | |
காண் இனி வாழி, தோழி! பானாள், |
|
மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின், |
|
மாஅல் யானை புலி செத்து வெரீஇ, |
|
இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும் |
|
5 |
பெருங் கல் நாடன் கேண்மை, இனியே, |
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண், |
|
மன்ற வேங்கை மண நாட் பூத்த |
|
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் |
|
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர் |
|
10 |
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் |
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும், |
|
விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை |
|
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி, |
|
'முருகு' என வேலற் தரூஉம். |
|
15 |
பருவமாகப் பயந்தன்றால், நமக்கே. |
தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்,சொல்லியது. - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் | |
மேல் |