செல்லூர்க் கோசிகன் கண்ணனார் |
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, |
|
மறுமை உலகமும் மறு இன்று எய்துப, |
|
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச் |
|
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப் |
|
5 |
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் |
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி! |
|
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு |
|
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின் |
|
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன் |
|
10 |
மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து, |
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும் |
|
பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர் |
|
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன். தாங்காது, |
|
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப் |
|
15 |
புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக் |
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த |
|
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு |
|
தானே புகுதந்தோனே; யான் அது |
|
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற் |
|
20 |
கலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச் சென்று |
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு |
|
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப் |
|
பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான், |
|
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய |
|
25 |
பழங் கணோட்டமும் நலிய, |
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே. |
|
பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன் கண்ணனார் | |
உரை |
மேல் |