சேந்தன் கண்ணனார் |
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப, |
|
எறி திரை ஓதம் தரல் ஆனாதே; |
|
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் |
|
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப, |
|
5 |
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; |
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி |
|
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது, |
|
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச் |
|
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப! |
|
10 |
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, |
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர் |
|
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென, |
|
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும் |
|
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண், |
|
15 |
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே! |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன் கண்ணனார் | |
உரை |
மேல் |