சேரமான் இளங்குட்டுவன் |
நோகோ யானே; நோதகும் உள்ளம்; |
|
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ, |
|
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி, |
|
வெம்பும்மன், அளியள்தானே இனியே, |
|
5 |
வன்கணாளன் மார்புஉற வளைஇ, |
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண் |
|
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத் |
|
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு, |
|
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின், |
|
10 |
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப் |
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை |
|
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல் |
|
வல்லுநள்கொல்லோ தானே எல்லி |
|
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி |
|
15 |
மீனொடு பொலிந்த வானின் தோன்றி, |
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின் |
|
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர் |
|
கை விடு சுடரின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன் | |
உரை |
மேல் |