தங்கால் பொற்கொல்லனார் |
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு |
|
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம் |
|
வரைமுதல் சிதறிய வை போல், யானைப் |
|
புகர் முகம் பொருத புது நீர் ஆலி |
|
5 |
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, |
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் |
|
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும் |
|
10 |
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் |
அருளான் வாழி, தோழி! அல்கல் |
|
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின் |
|
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல், |
|
காயா மென் சினை தோய நீடிப் |
|
15 |
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் |
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி |
|
கை ஆடு வட்டின் தோன்றும் |
|
மை ஆடு சென்னிய மலைகிழவோனே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
உரை |
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும் |
|
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்; |
|
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை, |
|
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை |
|
5 |
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்; |
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர், |
|
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர் |
|
செழு மனை மறக்கும் செவ்வி வேனில் |
|
தானே வந்தன்றுஆயின், ஆனாது |
|
10 |
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் |
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி! |
|
'யாமே எமியம் ஆக, நீயே |
|
பொன் நயந்து அருள் இலையாகி, |
|
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே. |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
உரை |
மேல் |