தொண்டியாமூர்ச் சாத்தனார் |
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட, |
|
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை, |
|
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன் |
|
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை, |
|
5 |
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக் |
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் |
|
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும் |
|
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி |
|
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து, |
|
10 |
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை |
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக் |
|
கயல் உமிழ் நீரின் கண் பனி வார, |
|
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு |
|
வருந்துமால், அளியள், திருந்திழைதானே! |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - தொண்டியாமூர்ச் சாத்தனார் | |
உரை |
மேல் |