தொல் கபிலன் |
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய, |
|
செறி மடை அம்பின், வல் வில், கானவன் |
|
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு, |
|
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன், |
|
5 |
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, |
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க |
|
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, |
|
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு, |
|
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார் |
|
10 |
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு |
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து |
|
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய் |
|
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்; |
|
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி, |
|
15 |
யாயும், 'அவனே' என்னும்; யாமும், |
'வல்லே வருக, வரைந்த நாள்!' என, |
|
நல் இறை மெல் விரல் கூப்பி, |
|
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன் | |
உரை |
மேல் |