நக்கண்ணையார் |
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து |
|
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி |
|
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி, |
|
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப் |
|
5 |
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி, |
தனியன் வருதல் அவனும் அஞ்சான்; |
|
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட, |
|
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்; |
|
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத் |
|
10 |
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித் |
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப் |
|
பெருங் குளம் காவலன் போல, |
|
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கண்ணையார் | |
உரை |
மேல் |