நல்லாவூர் கிழார் |
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை |
|
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால் |
|
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி |
|
மனை விளக்குறுத்து, மாலை தொடரி, |
|
5 |
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை; |
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் |
|
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென, |
|
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர், |
|
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் |
|
10 |
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர, |
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று |
|
வால் இழை மகளிர் நால்வர் கூடி, |
|
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் |
|
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என, |
|
15 |
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி |
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, |
|
வதுவை நல் மணம் கழிந்த பின்றை, |
|
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து, |
|
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர, |
|
20 |
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், |
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து |
|
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ, |
|
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப, |
|
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின் |
|
25 |
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என, |
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின், |
|
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர, |
|
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து, |
|
ஒய்யென இறைஞ்சியோளே மாவின் |
|
30 |
மடம் கொள் மதைஇய நோக்கின், |
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே. |
|
வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார் | |
உரை |
மேல் |