நன்பலூர்ச் சிறு மேதாவியார் |
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய |
|
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய, |
|
வான் எனப் பூத்த பானாட் கங்குல், |
|
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் |
|
5 |
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, |
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன், |
|
ஐது படு கொள்ளி அங்கை காய, |
|
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி |
|
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய, |
|
10 |
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் |
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து |
|
ஆர்வம் சிறந்த சாயல், |
|
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே! |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார் | |
உரை |
களவும் புளித்தன; விளவும் பழுநின; |
|
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், |
|
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, |
|
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து |
|
5 |
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு |
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, |
|
இளையர் அருந்த, பின்றை, நீயும் |
|
இடு முள் வேலி முடக் கால் பந்தர், |
|
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில், |
|
10 |
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர, |
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள், |
|
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ |
|
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் |
|
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல் |
|
15 |
மன்ற இரும் புதல் ஒளிக்கும் |
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே. |
|
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார் | |
உரை |
மேல் |