பாடினோர் பகுதி

பறநாட்டுப் பெருங்கொற்றனார்

323. பாலை
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின்
செய்வோர் ஏச் சொல் வாட, காதலர்
வருவர் என்பது வாய்வதாக,
ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின்
5
அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத்
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி,
காணிய வம்மோ? கற்பு மேம்படுவி!
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து,
யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து
10
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின்
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு
ஆலி அழி துளி தலைஇக்
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே!

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பறநாட்டுப் பெருங்கொற்றனார்