பாண்டியன் அறிவுடைநம்பி |
மெய்யின் தீரா மேவரு காமமொடு |
|
எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி! |
|
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே |
|
அருவி ஆன்ற பைங் கால் தோறும் |
|
5 |
இருவி தோன்றின பலவே. நீயே, |
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி, |
|
பரியல் நாயொடு பல் மலைப் படரும் |
|
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின் |
|
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து, |
|
10 |
கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி, |
ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை, |
|
'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என, |
|
பிறர்த் தந்து நிறுக்குவள்ஆயின், |
|
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி | |
உரை |
மேல் |