பாண்டியன் ஏனாதிநெடுங்கண்ணனார் |
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து, |
|
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து, |
|
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி, |
|
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில், |
|
5 |
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று, |
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர, |
|
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப, |
|
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு, |
|
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்; |
|
10 |
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை, |
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி, |
|
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா, |
|
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து, |
|
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி |
|
15 |
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல் |
அண்ணல் யானை அடு போர் வேந்தர் |
|
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் |
|
ஓர் எயில் மன்னன் போல, |
|
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே! |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் | |
உரை |
மேல் |