பாலை பாடிய பெருங்கடுங்கோ |
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள், |
|
விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல, |
|
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ, |
|
குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற |
|
5 |
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள், |
கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல், |
|
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் |
|
முளிந்த ஓமை முதையல்அம் காட்டு, |
|
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி, |
|
10 |
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப, |
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன், |
|
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி, |
|
பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல், |
|
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர, |
|
15 |
பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம் |
இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு |
|
அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி |
|
அன்ன ஆக' என்னுநள் போல, |
|
முன்னம் காட்டி, முகத்தின் உரையா, |
|
20 |
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி, |
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, |
|
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத் |
|
தூ நீர் பயந்த துணை அமை பிணையல் |
|
மோயினள் உயிர்த்த காலை, மா மலர் |
|
25 |
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் |
கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி |
|
உழையம் ஆகவும் இனைவோள் |
|
பிழையலள்மாதோ, பிரிதும் நாம் எனினே! |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன |
|
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் |
|
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் |
|
மாண் இழை மகளிர் பூணுடை முலையின் |
|
5 |
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை |
அதிரல் பரந்த அம் தண் பாதிரி |
|
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ |
|
மராஅ மலரொடு விராஅய், பராஅம் |
|
அணங்குடை நகரின் மணந்த பூவின் |
|
10 |
நன்றே, கானம்; நயவரும் அம்ம; |
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை |
|
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், |
|
பிடி மிடை, களிற்றின் தோன்றும் |
|
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே! |
|
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர் |
|
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி |
|
வருவர் வாழி, தோழி! அரச |
|
யானை கொண்ட துகிற் கொடி போல, |
|
5 |
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி |
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர, |
|
மழை என மருண்ட மம்மர் பல உடன் |
|
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை |
|
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் |
|
10 |
அத்தக் கேழல் அட்ட நற் கோள் |
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப, |
|
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி, |
|
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட |
|
புண் தேர் விளக்கின், தோன்றும் |
|
15 |
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் |
|
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் |
|
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம் |
|
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே |
|
5 |
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம் |
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின் |
|
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் |
|
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய |
|
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி, |
|
10 |
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது |
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி |
|
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி, |
|
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை |
|
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த |
|
15 |
விரல் ஊன்று வடுவின் தோன்றும் |
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை |
|
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய, |
|
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து, |
|
இரும்பின் இன் உயிர் உடையோர் போல, |
|
5 |
வலித்து வல்லினர், காதலர்; வாடல் |
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர் |
|
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய, |
|
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் |
|
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து |
|
10 |
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில், |
பெரு விழா விளக்கம் போல, பல உடன் |
|
இலை இல மலர்ந்த இலவமொடு |
|
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் |
|
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி, |
|
ஆழல் வாழி, தோழி! கேழல் |
|
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் |
|
5 |
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர், |
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு |
|
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் |
|
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை, |
|
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின் |
|
10 |
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் |
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி |
|
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் |
|
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட, |
|
நன் முகை அதிரல் போதொடு, குவளைத் |
|
15 |
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின் |
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ |
|
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர, |
|
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த் |
|
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல் |
|
5 |
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச் |
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின் |
|
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி |
|
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென |
|
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய், |
|
10 |
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு, |
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை |
|
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி |
|
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு |
|
வில்லோர் குறும்பில் ததும்பும், |
|
15 |
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே. |
புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து, |
|
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து, |
|
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி, |
|
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து, |
|
5 |
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை, |
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை, |
|
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ |
|
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர, |
|
மை பட்டன்ன மா முக முசுவினம் |
|
10 |
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென |
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய், |
|
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் |
|
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் |
|
தாம் பழி உடையர்அல்லர்; நாளும் |
|
15 |
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை |
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த, |
|
தோளே தோழி! தவறு உடையவ்வே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
வானம் பெயல் வளம் கரப்ப, கானம் |
|
உலறி இலை இலவாக, பல உடன் |
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப, |
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் |
|
5 |
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் |
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு |
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல், |
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் |
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை |
|
10 |
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் |
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப, |
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர |
|
உவலை சூடிய தலையர், கவலை |
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும் |
|
15 |
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர |
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் |
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று, |
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி, |
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி, |
|
20 |
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் |
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு |
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப் |
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல், |
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி |
|
25 |
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. |
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ | |
உரை |
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என |
|
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம் |
|
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும், |
|
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க, |
|
5 |
ஐய ஆக வெய்ய உயிரா, |
இரவும் எல்லையும் படர் அட வருந்தி, |
|
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப, |
|
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய, |
|
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து, |
|
10 |
வருவர் வாழி, தோழி! பெரிய |
நிதியம் சொரிந்த நீவி போலப் |
|
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை, |
|
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர் |
|
வசி படு புண்ணின் குருதி மாந்தி, |
|
15 |
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல, |
இல் வழிப் படூஉம் காக்கைக் |
|
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த |
|
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி, |
|
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய, |
|
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின் |
|
5 |
அவணது ஆக, பொருள்' என்று, உமணர் |
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை, |
|
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப் |
|
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி, |
|
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது |
|
10 |
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே |
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர், |
|
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி, |
|
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர, |
|
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ, |
|
15 |
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை, |
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை, |
|
கள்ளி நீழல் கதறுபு வதிய, |
|
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை, |
|
எமியம் கழிதந்தோயே பனி இருள் |
|
20 |
பெருங் கலி வானம் தலைஇய |
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே! |
|
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய, |
|
தெருளாமையின் தீதொடு கெழீஇ, |
|
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து, |
|
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே! |
|
5 |
நினையினைஆயின், எனவ கேண்மதி! |
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை, |
|
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி, |
|
நனவின் இயன்றதுஆயினும், கங்குல் |
|
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால், |
|
10 |
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி, |
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி |
|
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப, |
|
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு, |
|
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி, |
|
15 |
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின் |
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின் |
|
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி, |
|
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு |
|
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு, |
|
20 |
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல், |
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள் |
|
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர, |
|
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று, |
|
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப் |
|
25 |
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த |
நிரம்பா நீள் இடைத் தூங்கி, |
|
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
மேல் |