பெருந்தேவனார் |
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற, |
|
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து, |
|
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை, |
|
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி, |
|
5 |
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி |
எருவைச் சேவல் கரிபு சிறை தீய, |
|
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை, |
|
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி |
|
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின் |
|
10 |
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது, |
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ் |
|
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும் |
|
மனைமுதல் வினையொடும் உவப்ப, |
|
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே. |
|
பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார் | |
உரை |
மேல் |