பொதும்பில் கிழார் வெண்கண்ணனார் |
மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல் |
|
பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ! |
|
யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின் |
|
எய்யா வரி வில் அன்ன பைந் தார், |
|
5 |
செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி, |
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல் |
|
வளை சிறை வாரணம் கிளையொடு கவர, |
|
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள் |
|
நீ வந்து அளிக்குவைஎனினே மால் வரை |
|
10 |
மை படு விடரகம் துழைஇ, ஒய்யென |
அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி |
|
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின், |
|
இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல் |
|
உரும் இறை கொண்ட உயர்சிமைப் |
|
15 |
பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே. |
தோழி தலைமகனைச் செறிப்பு அறிவுறீஇ இரவுக் குறி மறுத்தது. -பொதும்பில்கிழான் வெண்கண்ணனார் | |
உரை |
மேல் |