பொருந்தில் இளங்கீரனார் |
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி |
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து |
|
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை, |
|
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் |
|
5 |
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், |
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று, |
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது, |
|
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே |
|
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின் |
|
10 |
சேயிதழ் அனைய ஆகி, குவளை |
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, |
|
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி, |
|
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல் |
|
வெய்ய உகுதர, வெரீஇ, பையென, |
|
15 |
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை |
பூ வீ கொடியின் புல்லெனப் போகி, |
|
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக, |
|
இயங்காது வதிந்த நம் காதலி |
|
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே! |
|
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார் | |
உரை |
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி, |
|
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப, |
|
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு |
|
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் |
|
5 |
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற, |
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை, |
|
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில், |
|
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம், |
|
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய |
|
10 |
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி, |
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண் |
|
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப, |
|
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி, |
|
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை, |
|
15 |
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என |
உள்ளுதொறு படூஉம் பல்லி, |
|
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே? |
|
பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார் | |
உரை |
மேல் |