போந்தைப் பசலையார் |
அன்னை அறியினும் அறிக; அலர்வாய் |
|
அம் மென் சேரி கேட்பினும் கேட்க; |
|
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி, |
|
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி, |
|
5 |
கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல் |
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும், |
|
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும், |
|
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது |
|
இருந்தனமாக, எய்த வந்து, |
|
10 |
'தட மென் பணைத் தோள் மட நல்லீரே! |
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்; |
|
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக் |
|
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?' |
|
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு, |
|
15 |
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி, |
'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த |
|
கொழு மீன் வல்சி' என்றனம், இழுமென. |
|
'நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ |
|
காணாமோ?' எனக் காலின் சிதையா, |
|
20 |
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் |
என்னே குறித்த நோக்கமொடு, 'நன்னுதால்! |
|
ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி, |
|
யான் 'பெயர்க' என்ன, நோக்கி, தான் தன் |
|
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி |
|
25 |
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே. |
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - போந்தைப் பசலையார் | |
உரை |
மேல் |