மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
நகை ஆகின்றே தோழி! நெருநல் |
|
மணி கண்டன்ன துணி கயம் துளங்க, |
|
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
5 |
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய |
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப, |
|
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் |
|
தண் துறை ஊரன் திண் தார் அகலம் |
|
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய, |
|
10 |
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் |
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு, |
|
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு |
|
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று, |
|
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற |
|
15 |
என்னும் தன்னும் நோக்கி, |
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே. |
|
பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி, |
|
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து |
|
சென்றீக' என்பஆயின், வேந்தனும் |
|
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு |
|
5 |
இன்றே புகுதல் வாய்வது; நன்றே. |
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத் |
|
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற, |
|
பாசறை வருத்தம் வீட, நீயும் |
|
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை, |
|
10 |
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி, |
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை |
|
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய, |
|
காலை எய்த, கடவுமதி மாலை |
|
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை |
|
15 |
அரமிய வியலகத்து இயம்பும் |
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த |
|
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப் |
|
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல், |
|
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று, |
|
5 |
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்! |
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த |
|
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு, |
|
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம், |
|
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின், |
|
10 |
தீதும் உண்டோ, மாதராய்?' என, |
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர் |
|
கை வல் பாகன் பையென இயக்க, |
|
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில் |
|
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி, |
|
15 |
சிறிய இறைஞ்சினள், தலையே |
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே. |
|
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
'நரை விராவுற்ற நறு மென் கூந்தற் |
|
செம் முது செவிலியர் பல பாராட்ட, |
|
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி |
|
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ, |
|
5 |
மனை உறை புறவின் செங் காற் சேவல் |
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல, |
|
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும் |
|
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை |
|
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல, |
|
10 |
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி, |
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும், |
|
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி |
|
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப, |
|
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய, |
|
15 |
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென |
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின் |
|
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான் |
|
சொல்லிய அளவை, நீடாது, வல்லென, |
|
தார் மணி மா அறிவுறாஅ, |
|
20 |
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே! |
வினை முற்றி வந்து எய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் |
|
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் |
|
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு |
|
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, |
|
5 |
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, |
தனியன் வந்து, பனி அலை முனியான், |
|
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற |
|
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி |
|
அசையா நாற்றம் அசை வளி பகர, |
|
10 |
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் |
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும், |
|
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு, |
|
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி, |
|
உருவச் செந் தினை நீரொடு தூஉய், |
|
15 |
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! |
என் ஆவது கொல்தானே பொன் என |
|
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய |
|
மணி நிற மஞ்ஞை அகவும் |
|
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
|
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
சிலம்பில் போகிய செம் முக வாழை |
|
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், |
|
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் |
|
நல் வரை நாடனொடு அருவி ஆடியும், |
|
5 |
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், |
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் |
|
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் |
|
அரிய போலும் காதல் அம் தோழி! |
|
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
|
10 |
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், |
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என, |
|
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச் |
|
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை, |
|
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு, |
|
15 |
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
மேல் |