மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் |
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை |
|
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி, |
|
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி |
|
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய, |
|
5 |
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி, |
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது |
|
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய், |
|
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே |
|
கொய் அகை முல்லை காலொடு மயங்கி, |
|
10 |
மை இருங் கானம் நாறும் நறு நுதல், |
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை |
|
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும் |
|
அளியரோ அளியர்தாமே அளி இன்று |
|
ஏதில் பொருட்பிணிப் போகி, தம் |
|
15 |
இன் துணைப் பிரியும் மடமையோரே! |
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரையாசிரியர் நல்லந்துவனார் | |
உரை |
மேல் |