மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன், மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் |
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக் |
|
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென; |
|
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு |
|
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா, |
|
5 |
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி |
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட; |
|
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது, |
|
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென |
|
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்; |
|
10 |
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப, |
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன், |
|
காவலர் அறிதல் ஓம்பி, பையென |
|
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து, |
|
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து, |
|
15 |
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி! |
இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன் |
|
நல்காமையின் அம்பல் ஆகி, |
|
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் |
|
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே? |
|
இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன் | |
உரை |
என் ஆவதுகொல் தானே முன்றில், |
|
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து, |
|
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி, |
|
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ, |
|
5 |
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் |
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல் |
|
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் |
|
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர், |
|
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, |
|
10 |
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி, |
'யானை வவ்வின தினை' என, நோனாது, |
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
|
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் |
|
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் | |
உரை |
மேல் |