மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார், மதுரை எழுத்தாளன் |
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில் |
|
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி, |
|
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ, |
|
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர |
|
5 |
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை |
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி, |
|
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய, |
|
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும் |
|
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின் |
|
10 |
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே, |
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி, |
|
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு |
|
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும் |
|
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் |
|
15 |
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, |
வினைவயின் பெயர்க்கும் தானை, |
|
புனைதார், வேந்தன் பாசறையேமே! |
|
தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன் | |
உரை |
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் |
|
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் |
|
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப் |
|
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் |
|
5 |
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் |
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின், |
|
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை, |
|
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள, |
|
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல் |
|
10 |
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல் |
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை, |
|
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து, |
|
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ |
|
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக் |
|
15 |
கூழை உளர்ந்து மோழைமை கூறவும், |
மறுத்த சொல்லள் ஆகி, |
|
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் | |
உரை |
மேல் |