மதுரைக் கணக்காயனார் |
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை |
|
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் |
|
கானம் கடிய என்னார், நாம் அழ, |
|
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார், |
|
5 |
செல்ப" என்ப' என்போய்! நல்ல |
மடவைமன்ற நீயே; வடவயின் |
|
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை, |
|
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் |
|
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன |
|
10 |
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் |
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத் |
|
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப் |
|
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட, |
|
15 |
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் |
குருதியொடு துயல்வந்தன்ன நின் |
|
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே? |
|
செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார் | |
உரை |
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் |
|
மறம் கெழு தானை அரசருள்ளும், |
|
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர் |
|
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள், |
|
5 |
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன் |
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன், |
|
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல், |
|
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின், |
|
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற |
|
10 |
முயங்கல் இயையாதுஆயினும், என்றும், |
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக, |
|
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் |
|
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன் |
|
அகல் இருங் கானத்துக் கொல்லி போல, |
|
15 |
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின் |
அறாஅலியரோ, தூதே பொறாஅர் |
|
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள், |
|
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன், |
|
தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து, |
|
20 |
வழங்கல் ஆனாப் பெருந் துறை |
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே! |
|
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் | |
உரை |
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை; |
|
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான் |
|
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது |
|
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை |
|
5 |
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் |
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன், |
|
ஏவல் இளையர் தலைவன், மேவார் |
|
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப் |
|
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை, |
|
10 |
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ |
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ் |
|
வரையரமகளிரின் அரியள், |
|
அவ் வரி அல்குல் அணையாக்காலே! |
|
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் | |
உரை |
மேல் |