மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தானார் |
அறியாய், வாழி தோழி! இருள் அற |
|
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக் |
|
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய, |
|
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய், |
|
5 |
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு |
|
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில் |
|
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை |
|
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின், |
|
10 |
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் |
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் |
|
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும், |
|
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல் |
|
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் |
|
15 |
பொருளே காதலர் காதல்; |
'அருளே காதலர்' என்றி, நீயே. |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
வானம் வாய்ப்பக் கவினி, கானம் |
|
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, |
|
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, |
|
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல |
|
5 |
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் |
செய்கை அன்ன செந் நிலப் புறவின்; |
|
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத் |
|
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க, |
|
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை |
|
10 |
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த |
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு |
|
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை |
|
கடுமான் தேர் ஒலி கேட்பின், |
|
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. |
|
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் |
|
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென, |
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
|
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி |
|
5 |
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் |
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், |
|
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி, |
|
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள் |
|
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென, |
|
10 |
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்! |
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் |
|
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப, |
|
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி |
|
நல் மா மேனி தொலைதல் நோக்கி, |
|
15 |
இனையல் என்றி; தோழி! சினைய |
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் |
|
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து, |
|
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை, |
|
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம் |
|
20 |
இன் இளவேனிலும் வாரார், |
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ! |
|
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய |
|
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ |
|
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, |
|
5 |
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் |
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, |
|
பழன யாமை பசு வெயில் கொள்ளும் |
|
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! |
|
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட |
|
10 |
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி |
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த |
|
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, |
|
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு |
|
ஊடினள் சிறு துனி செய்து எம் |
|
15 |
மணல் மலி மறுகின் இறந்திசினோளே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ, |
|
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், |
|
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், |
|
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் |
|
5 |
கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப! |
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் |
|
அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும், |
|
நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம் |
|
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும், |
|
10 |
தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை |
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் |
|
வண்டற் பாவை சிதைய வந்து, நீ |
|
தோள் புதிது உண்ட ஞான்றை, |
|
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே? |
|
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
மேல் |