மதுரைச் செங்கண்ணனார் |
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து, |
|
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின் |
|
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க, |
|
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின் |
|
5 |
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து |
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி |
|
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை |
|
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக் |
|
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின், |
|
10 |
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு |
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து |
|
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு, |
|
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென, |
|
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி, |
|
15 |
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் |
பரந்து படு பாயல் நவ்வி பட்டென, |
|
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு, |
|
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு, |
|
'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின் |
|
20 |
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின் |
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி, |
|
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து, |
|
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின் |
|
ஏற்று ஏக்கற்ற உலமரல் |
|
25 |
போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே! |
பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச் செங்கண்ணனார் | |
உரை |
மேல் |