மதுரைத் தத்தங் கண்ணனார் |
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் |
|
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல் |
|
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல் |
|
யானும் அறிவென்மன்னே; யானை தன் |
|
5 |
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து, |
இன்னா வேனில் இன் துணை ஆர, |
|
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட, |
|
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம் |
|
அரிய அல்லமன், நமக்கே விரி தார் |
|
10 |
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் |
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ, |
|
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால், |
|
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த |
|
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் |
|
15 |
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு, |
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய, |
|
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின், |
|
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ |
|
வார் உறு கவரியின் வண்டு உண விரிய, |
|
20 |
முத்தின் அன்ன வெள் வீ தாஅய், |
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி |
|
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப் |
|
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய் |
|
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று |
|
25 |
அமிழ்தம் ஊறும் செவ் வாய், |
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே! |
|
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார் | |
உரை |
மேல் |