மதுரைத் தமிழக்கூத்தன் கடுவன் மள்ளனார், மதுரைத் தமிழக் கூத்தனார் கடுவன் மள்ளனார் |
கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, |
|
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் |
|
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, |
|
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் |
|
5 |
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே |
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற, |
|
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே |
|
வதுவை கூடிய பின்றை, புதுவது |
|
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் |
|
10 |
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் |
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் |
|
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் |
|
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி |
|
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை, |
|
15 |
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த |
பல் வீழ் ஆலம் போல, |
|
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. |
|
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் | |
உரை |
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில |
|
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை |
|
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப் |
|
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் |
|
5 |
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு |
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது |
|
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! |
|
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே |
|
கையகப்பட்டமை அறியாய்; நெருநை |
|
10 |
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை |
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து, |
|
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது |
|
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத் |
|
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி, |
|
15 |
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், |
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய |
|
அறனிலாளன்,'அறியேன்' என்ற |
|
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய், |
|
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி, |
|
20 |
நீறு தலைப்பெய்த ஞான்றை, |
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் | |
உரை |
மத வலி யானை மறலிய பாசறை, |
|
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப, |
|
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு |
|
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள, |
|
5 |
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து, |
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக் |
|
கடு நடைப் புரவி வழிவாய் ஓட, |
|
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர் |
|
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து, |
|
10 |
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய, |
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின், |
|
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட |
|
போது உறழ் கொண்ட உண்கண் |
|
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே? |
|
வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் | |
உரை |
மேல் |