மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் |
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ, |
|
மன் உயிர் மடிந்த பானாட் கங்குல், |
|
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது, |
|
வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத் |
|
5 |
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை, |
கூதிர், இல் செறியும் குன்ற நாட! |
|
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ் |
|
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற, |
|
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே |
|
10 |
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் |
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை |
|
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி, |
|
மனைமரம் ஒசிய ஒற்றிப் |
|
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே. |
|
சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
உரை |
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு |
|
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி, |
|
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட, |
|
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை |
|
5 |
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத் |
தண் துளி அசைவளி தைவரும் நாட! |
|
கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது, |
|
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது, |
|
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை |
|
10 |
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின், |
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி, |
|
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ, |
|
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண் |
|
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே |
|
15 |
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை |
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும் |
|
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள், |
|
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன், |
|
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு, |
|
20 |
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர் |
நீடலர் ஆகி வருவர், வல்லென; |
|
கங்குல் உயவுத் துணை ஆகிய |
|
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
உரை |
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர் |
|
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு, |
|
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, |
|
அரவின் பைந் தலை இடறி, பானாள் |
|
5 |
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி, |
துனி கண் அகல அளைஇ, கங்குலின் |
|
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல் |
|
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின், |
|
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம் |
|
10 |
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு |
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி |
|
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று, |
|
கழை தின் யாக்கை விழை களிறு தைவர, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் |
|
15 |
சாரல் நாடன் சாயல் மார்பே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
உரை |
மேல் |